வாக்களியுங்கள் !


அஸ்ஸலாமு அலைக்கும் அன்பர்களே !

* வருகிற பிரதேச சபை தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள் . .

* உங்கள் வாக்குகள் பிரயோசனமாக இருக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள் !

* நீங்கள் இடும் வாக்குகள் ஒரு பிரயோசனமில்லாத வாக்காக இருக்கக் கூடாது என்று சிந்தித்து வாக்களியுங்கள்.

 *இது உங்கள் ஒவ்வொருவருடைய வாக்குகளுக்கும் உரிய பலத்தை காண்பிக்கவேண்டிய தருணம் என நினைத்து வாக்களியுங்கள்.

* சாது மிரண்டால் காடு கொள்ளாது என நினைத்து வாக்களியுங்கள்.

* ஆனால் நீங்கள் இடுகின்ற வாக்கு முழுதும் எமது சமூகத்தில் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்து வாக்களியுங்கள்.

* மாறாக நீங்கள் கட்சி பாகுபாடு பார்த்து வாக்களிக்க முயற்சித்து உங்களது வாக்குகளின் பெறுமதியை இல்லாமல் செய்து விடக்கூடாது என சிந்தித்து வாக்களியுங்கள்.

* எது எப்படிப்போனாலும் எமக்கென்று ஒரு பிரதிநிதி தேவை என நினைத்து உங்களில் உள்ள ஒருவருக்கு எல்லோருமாக ஒன்றிணைந்து பெரும்பான்மையாக வாக்களியுங்கள்.

*காலம் காலமாக யாரோ உண்டாக்கிய கட்சி பிரிவினைகளை தூர எரிந்து ஒரு நல்ல இஸ்லாமிய சமுதாயம் இந்த கட்சிப் பெயர்களால் சிதைந்து விடக்கூடாது என சிந்தித்து வாக்களியுங்கள்.

* இதற்காக ஒரு கட்சியாக இல்லாமல் ஒரு சமூகமாக இணைந்து எம்மில் ஒருவருக்கு வாக்களியுங்கள்.

* கட்சி என்பது தேர்தலில் நிற்பதற்கான ஒரு ஊடகமே தவிர அது தான் எமது உதிரம் என ஒரு நாளும் நினைத்துவிடாது சிந்தித்து வாக்களியுங்கள்.

* நாம் முட்டாள்களாகியது போதும் . . . மீண்டும் உங்களது புத்திசாலித் தனத்தை காண்பிக்கவேண்டும் என நினைத்து வாக்களியுங்கள்.

* இன்ஷா அல்லாஹ் நம்மில் ஒருவர் நமக்காக நமது பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவார். . . . 
 
அன்புடன்
அன்வாஸ் முகம்மத் 

No comments:






என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: