எனக்கு பிடித்த 3 முத்தான பாடல்கள்

செயட்கையான செட்ஸ் போட்டு ஸ்டுடியோவுக்குள் மட்டுமே வைத்து திரைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமா உலகம் அந்த நியதியை விட்டு விட்டு கிராமத்து மண் வாசத்துக்கு ரசிகர்களை கூட்டிச்சென்ற படம் 16 வயதினிலே. இந்தப் படத்தில் இருக்கும் செந்தூரப்பூவே என்று ஆரம்பிக்கும் பாடல் இளமைக் காலத்தில் பெண்களின் அழகு நூறு மடங்கு கூடிப்போகும் என்று சொல்லுவார்கள் அதற்கு ஏற்ற விதமாக செதுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல் கட்சியில் தோன்றும் ஸ்ரீ தேவி எல்லோரும் எதிர்பார்த்த அழகைக் கொடுக்கிறார். எனது பள்ளிப்பருவ நினைவுகளில் இந்த பாடல் ஒரு சிற்பம் போல என் மனதுள் செதுக்கப்பட்டு விட்டது.
தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்! 
கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்! 
என்ற கங்கை அமரனின் வரிகள் என்னை கற்பனை உலகுக்கு அழைத்துச் செல்கிறது அமைதியாக.
அதிலும் இளயராஜாவின் இசை அந்த கிராமத்து எழிலை மெருகூட்டுகிறது அமர்க்களமாக வாருங்கள் கேட்கலாம் அந்த அழகிய பாடலை.

உன்னை கண்டு தென்றலும் நின்று போனதுண்டு 
உன்னை காண வென்னிலா வந்து போவதுண்டு 
ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறாய் 
முள் மீது ஏனடி தூங்க சொல்கிறாய் 
இதய கோவில் திரைப்படத்திற்காக எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய மௌன ராகம் இது. காதல் தோல்வி ஒரு அழகிய கவிதையாய் உருவெடுத்திருக்கிறது இந்தப் பாடலில் பாருங்கள் ஒரு தோற்றுப்போன சந்தர்ப்பம் கூட அழகிய கலையாய் மாறுவதை. இந்த உலகில் ஔவொரு தோல்விகளும் ஏதோ ஒரு நலவைத்தான் உண்டாக்குகின்றது. என் உதடுகள் அடிக்கடி முணு முணுக்கும் பாடல் ...
கேளடி கண்மணி படத்திற்காக இளயராஜாவின் இசையில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய பாடல் இது 
வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்...............
என்ன மூச்கு வாங்குகிறதா ? என்ன அருமயான வரிகள் இந்தப்படலில் ...
இன்னும் நிறைய இடைக்கால பாடல்கள் இருக்கின்றன நேரமின்மயால் அவற்றை இடமுடியவில்லை இருந்தாலும் நேரம் கிடைக்கும் பொது அவற்றையும் பதிவிட தவறா மாட்டேன் 

நன்றி 
என்றும் அன்புடன்
அன்வாஸ் ....

No comments:






என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: