புது வருடம் 2011

என்னடி சனியனே இன்னொரு வார்த்த அப்டி சொன்ன நான் மனுசனா இருக்க மாட்டேன் அப்டின்னு கொஞ்சம் கோவத்தோட அவன் பொண்டாட்டிய கண்டிக்குறான். இவன் எங்கயா கண்டிக்குறது அதுக்கு முன்னாடி தான் அவளே இவன தூக்கி மிதிச்சிடுவா போல, ஏன்னா இவ சொன்ன பதில் அப்டி இருக்கு அப்டி என்னடா சொன்னான்னு பாக்குறீங்களா நீ இப்ப மட்டும் என்ன மனுசனாவா இருக்க வாயில நல்லா வருது அப்டிங்குறா என்ன பொன்னுயா இதுன்னு தோனுதா அப்டித்தாங்க எனக்கும் இருந்துச்சு அவன் என்னடான்னா என்னடி வரும் ஓ நார வாயில அப்டிங்குறான் இது எரியுர வெளக்குக்கு எண்ண ஊத்துர மாதிரி இல்லயா? இவன்தான் வேவஸ்த இல்லாம இப்படி பேசுரான்னு பாத்தா அவ ஒரு படி மேலங்க ஏ வாயாடா நார வாய் ஓ வாய் தா பண்ணிவாய் பல்லு வெலக்காதவன்ண்டு சொன்னா எந்த மானஸ்தமுள்ள ஆம்புலக்கிங்க பொருத்துக்க முடியும் 

ஆம்புலங்கிலா நீங்க நெனக்கிரத போலவே அவனுக்கும் கோவம் பொத்துக்கிட்டு வந்துச்சு நானாடி பல்லு வெலக்காதவன் நீ தாண்டி ஒண்ணுமே வெலங்காதவ ஓ மூஞ்சில முழிச்சிட்டு போயி எந்த கரியண்டி வெளங்குச்சி.. அவ்ளவு தாங்க அவ கோவத்தோட ஒரு மொரப்பு மொரச்சா நீங்க மழ பெஞ்சி முடிஞ்சா ஒரு வருமே ஒரு அமைதி பாத்திருக்கிங்களா? அதே மாதிரி ஒரு அமைதிங்க அவ இந்த அமைதிய கலைக்கிற மாதிரி ஒரு வார்த்த சொல்றாங்க; இதுக்கு மேல ஒரு வார்த்த பேசாத .. போதும் எல்லாமே போதும் உன் கூட வாழ்ந்தது எல்லாமே போதும் நான் செத்தா கூட என் பொனத்த பாக்க கூட வந்துடாத கூட் பாய் .... அப்டின்னு சொல்லிட்டு வெடுக்குனு பெட்டியெல்லாம் மடிச்சி கட்டிக்கிட்டு வெளிய கெளம்புறாங்க இந்த நேரத்துல ஒருத்தன் என்னங்க செய்யனு அவள சமாதானப் படுத்தி வீட்டுக்குள்ளேயே வச்சி அவங்க பிரச்சினய சோள் பண்ணனுமா வேணாமா இவன் என்னடான்னா நீ செத்தா நா ஏண்டி வாறன் என் நாய் கூட வராதுடி அப்டிங்குறான் 

என்ன மனுசையா இவனெல்லாம் இதெல்லாம் நடக்குறதுக்கு 5 நிமிசத்துக்கு முன்னாடி தாங்க அவ்னு அவ்லு இப்டி பேசிக்கிட்டாங்க; ஏங்க ரெண்டு நாளா நீங்க உங்க பாட்டுக்கு ஆபீஸ் வேலயா ஊருக்கு போய்டிங்க உங்கள பிரிஞ்சி இந்த 48 மணி நேரம் நா பட்ட கஷ்டம் எனக்கு தாங்க தெரியு ஏங்க என்ன உட்டுட்டு இப்டி போறீங்க நீங்க இல்லாம நான் ஒரு நிமுசம் கூட இருக்க மாட்டேனு உங்களுக்கு தெரியுந் தானே ஆமாடி செல்லோ தெரியுந்த் தான் கண்ணு நா என்ன தங்கம் செய்ய ஏ வேல அப்டி ஆனா நான் அங்க இருந்த 48 மணி நேரமும் உன் நெனப்பாவே தா இருந்தன் இந்த 2 நாளா உண்ண ரொம்ப மிஸ் பண்ணிட்டண்டி அப்டின்னு கட்டிபுடிச்சு அதுக்கு மேல சொல்லலிங்க ஆபாசமா இருக்கும்

ஆனா அப்டி தேனும் பாலுமா இந்தவங்களா இப்டி சண்ட போட்டாங்கன்னு  யோசிக்கிறீங்களா? அதே தாங்க நானும் யோசிச்சன் எந்த காரணத்துக்கு ஆக வண்டி இப்டி சண்ட போட்டு வாழ்க்கயே பிரிஞ்சி போற அளவுக்கு வந்து நிக்காங்க அப்டின்னு பாத்தா நீங்க என்னங்க சொல்லுவிங்க ஈகோ, இல்ல ரெண்டுபேருக்கும் புரிஜிகிற மனப்பான்ம இல்ல அப்டிண்டா அது தாங்க இல்ல என்னா இவங்க ரெண்டுபேரும் ஓராள ஓராளு புரிஞ்சி சண்ட சச்சரவு ஈகோ இல்லாம வீட்டுக்குடுத்து வாழ்ந்தவங்க தாங்க ஆனா அந்த நியூ இயர் ராத்திரில ஒண்ணா சேந்து சந்தோசத்துல ஒரு பெக் அடிச்சுட்டாங்க அது தாங்க அவங்கள இப்டியெல்லாம் பேச வச்சிட்டு நியூ இயர வரவேக்குறதுக்கு இவங்க அடிச்ச பெக்கு இவங்க வாழ்க்கய வழியனுப்பிடுச்சு பாதிங்களா ? இந்த மாதிரி பெக்கடிக்குறது இந்த காலத்துல சகஜம் அப்டின்னு கேசுவளா சொள்ளுறாங்க ஆனா ஒரு குடும்பத்துலே இவ்ளோ பிரச்சினய உண்டாக்குற இந்த பாலாப்போன குடி நம்ம கலாச்சாரத்துக்கு தேவயாங்க? கேட்டா நாங்க 2011ல இருக்கோம் அப்டிங்குராங்க ஆனா 2010 கடசி ராத்திரி தொழச்ச அந்த வாழ்க்கய பத்தி இவங்களுக்கெல்லாம் ஒரு கவல கூட கெடயாதுங்க நாம தாங்க இந்த சமுதாயத்த பத்தி ரொம்ப கவலப்படுறோம் ஆனா இவங்களுக்கு இவன் இல்லன்னா இன்னொருத்தான் அவ இல்லேன்னா இன்னொருத்தி எப்ப நம்ம சமுதாயம் உருப்பட போகுதுன்னு நெனக்கிறீங்களா? ஆனா ஒண்ணுங்க இந்த ஜென்மங்கள் நாமலு ஒரு சமுதாயத்துக்குள்ள தான் இருக்கோம் சமூகம் அப்டின்னு சொன்னா அது ஒரு உடல் மாதிரி இந்த உடம்புல எந்த பகுதில வருத்தம் வந்தாலும் அது முழு ஒடம்பயும் தான் பாதிக்கும் அப்டின்னு நெனச்சி  நா வந்து தனி ஆள் கெடயாது எனக்கு ஒரு பிரச்சின வந்துச்சு அப்டின்னா அது என்னட சமூகத்துக்கும் தான் பிரச்சனாயா இருக்கும் அப்டின்னு நெனக்கும் போது தாங்க.... இல்லேன்னா நீங்க நான் மட்டும் நல்லா இருந்து அவங்களெல்லாம் அப்டியே இருந்தாங்கன்னா பாதிப்பு அவங்களுக்கும் மட்டும் இல்லீங்க நம்மளுக்கும் தான்....
அது சரிங்க அந்த பிரச்சினய அப்புறம் நிம்மதியா பாக்கலாம் இப்ப இத சொடுக்கி ஒரு ஓட்டு போடுங்கங்கங்ககங்க ................
என்றும் அன்புடன்
அன்வாஸ்          





என்னைத் தொடர்பு கொள்ள ......

பெயர்:
மின்னஞ்சல்:
கருத்துக்கள்: